என்னை ரொம்ப கலாய்க்கிறார்கள்; மீண்டும் நடை பயணம் போகப் போகிறேன் - வைகோ குமுறல்

புதன், 22 பிப்ரவரி 2017 (11:30 IST)
சமூக வலைத்தளங்களில் தன்னை மிகவும் இழிவாக சித்தரிக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வேதனை தெரிவித்துள்ளார்.


 

 
வாட்ஸ் அப், முகநூல் (ஃபேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களில்  வைகோ மற்றும் விஜயகாந்த் ஆகியோரின் புகைப்படங்களை பதிவு செய்து பலரும், பல்வேறு விதமாக கிண்டல் செய்து வருகின்றனர். 
 
இதுபற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த வைகோ “ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கலில் என்னுடைய செல்போன் எண்ணை யாரோ பதிவு செய்துள்ளனர். மேலும், என்னை பற்றி மோசமாகவும், உண்மைக்கு புறம்பாகவும் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், அதுபற்றி நான் கவலை படப்போவதில்லை. என்னை இழிவாக பேசுவதற்கு பதில், ஆக்கப்பூர்வமான கருத்துகளை பதிவிடலாம். 
 
பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி, மதிமுக சார்பில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்