வகுப்புவாத மோதலை தூண்டிவிடும் வகையில் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து வதோதராவில் வியாழக்கிழமை முதல் பதட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக சனிக்கிழமை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.