சஹரன்பூர் கலவரம் குறித்து தான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுக்கும்படி தான் ஏற்கனவே மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம் கூறியதாகவும் பிரதமரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பாக தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிதேந்திர சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகவும் அப்போது பிரதமரிடம் ராஜ்நாத்சிங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.