மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15,008 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் (குடிமை பணி) முதல்நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23ந்தேதி நடைபெற்றது.
தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.