அமைச்சர் கைலாஷ் யாதவ் திடீர் மரணம்

புதன், 10 பிப்ரவரி 2016 (22:59 IST)
அமைச்சர் கைலாஷ் யாதவ் உடல் நலக்குறைவால் திடீர் மரணம் அடைந்தார்.
 

 
உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்  கைலாஷ் யாதவ். இவர் தனது வீட்டில் இருந்த போது மூளையில் திடீரென ரத்தகசிவு ஏற்பட்டு மயங்கி அதே இடத்தில் சரிந்தார்.
 
உடனே, அவரை குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கைலாஷ் யாதவ் மரணம் அடைந்தார்.
 
சட்டசபை கூட்டம் நடந்து கொண்டு இருந்த போது அவரது மரணம் அடைந்துள்ளதால், அவருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள் வரை சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்