உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஆயுதபடை மைதானத்தில் நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மோடி தனது பேச்சை தொடங்கினார். அப்போது பாதுகாப்பு போலீசார் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 'மோடி ஒழிக' என்று கோஷமிட்டபடியே மோடியை நோக்கி செருப்பை வீசியெறிந்தார்.
பின்னர் போலீசாரும், பாஜக தலைவர்களும் தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் தொடர்ந்து மோடி பேசினார். மோடியை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.