சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரே, ரூ.50 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான திட்டப்பணிகளை எங்களை போன்றவர்கள் திறந்து வைக்க வழிவிடுவார். இது போன்ற சிறிய பணிகளுக்கு காரணமாக உறுப்பினரை, அதை திறந்து வைக்க கூறுவார். அப்போது தான் அந்த உறுப்பினருக்கு மதிப்பளித்ததாக இருக்கும் என்று அவர் தெரிவிப்பார். இப்பகுதிக்கு நான் தான் மாநகராட்சி உறுப்பினர். இந்த பூங்காவிற்கான திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். இதற்கான பெருமை என்னை தான் சாரும். ஆனால் இந்த விழாவிற்கு கூட நீங்கள் வந்துள்ளீர்கள் என்று ஷேத், உத்தவை கடுமையாக சாடினார்.
இவ்வாறு அவர் பேசும்போது, காங்கிரஸ்காரர்கள் யாரும் மேடையில் இருக்கவில்லை. ஆனால், பயமில்லாமல் மேடையிலேயே உத்தவை அவர் குற்றம் சாட்டினார். எனினும் அவர் பேசி முடித்தவுடன் தனது கட்சிக்காரர்களை அழைத்த உத்தவ், ஷேத்தை பாதுகாப்பாக காரில் ஏற்றி அவரது இல்லத்துக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். அவரும் பாதுகாப்பாக காரில் ஏறி வீட்டிற்கு சென்றார்.