சிறைக்குள் மோதல் : இரண்டு சவுதி அரேபியர்கள் உட்பட மூன்று பேர் பலி

ஞாயிறு, 31 ஜூலை 2016 (10:31 IST)
மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள சஜீவா மத்திய சிறையில் சிறைவாசிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் பலியானார்கள்.
 

 
சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்ற இந்த மோதலில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த சிறைவாசிகள் சுஷாக் அஹமது, அப்துல் சலாம் ஆகியோரும் மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் பகுதியைச் சேர்ந்த தங்மின்லயன் என்ற சிறைவாசியும் பலியாயினா்.
 
மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரி உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர். உயிரிழந்த மூவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான சவூதி அரேபிய சிறைவாசிகளின் விபரத்தை சிறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்