மாலை ஜுன்ஜுன்ஷா தனது மகள்களை அழைக்க பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்திவிட்டு மகள்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்ப மறுத்துள்ளனர். தன்னிடம் தற்போது பணம் இல்லை, சிறிது காலம் அவகாசம் கொடுங்கள் என்று ஜுன்ஜுன்ஷா கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி நிர்வாகத்தினர், பள்ளி கட்டணத்தை செலுத்தாவிட்டால் எங்கள் பள்ளி சீருடையை அணியக்கூடாது என கூறி சீருடைகளை அகற்றியுள்ளனர். ஜுன்ஜுன்ஷா வேறு வழியில்லாமல் அவரது மகள்களை அப்படியே வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த காட்சிகளை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்டது. பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அசோக்சவுத்ரி தெரிவித்துள்ளார்.