படப்பிடிப்பில் நடிகர்கள் உயிரிழப்பு

திங்கள், 7 நவம்பர் 2016 (17:53 IST)
பெங்களூரில் நடைபெற்ற மஸ்திகுடி என்ற கன்னடப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர்கள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூருக்கு அருகே உள்ள திப்பஹோண்டனஹள்ளி என்ற ஆற்றுக்கு அருகே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அனில், உதய் என்ற இரு நடிகர்கள் ஆற்றில் குதிப்பது போல் இன்று படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தனர்.
 
அப்போது ஏற்பட்ட விபத்தில் அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்து விட்டது உறுதியாகியுள்ளது.
 
விரிவான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்