இதுகுறித்து பிர்பும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலோக் ராஜோரியா தெரிவித்துள்ளதாவது:- அசோக் முகர்ஜி தன் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு வந்த போது 4 மர்ம நபர்கள் 2 மோட்டார் சைக்கிளில் வந்து அவரை சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சுடப்பட்டதும் அசோக் முகர்ஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தலைவரான அசோக் கோஷ் சுட்டு கொல்லப்பட்டார்.