எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் 50 பேர் காயம்

புதன், 16 ஏப்ரல் 2014 (14:56 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் திம்பூர்–கமாக்யா இடையே சென்றுக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை  தடம் புரண்டது, இந்த விபத்தில் சுமார் 50 பயணிகள் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அஸ்ஸாமில் உள்ள மோரிகான் பகுதியில் சென்று கொண்டிருந்த 15666 BG எக்ஸ்பிரஸ் ரயில் அஜுரி ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்டது. ஒன்றன்பின் ஒன்றாக 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால், சுமார் 50 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருந்தது.
 
அவர்களில் 17 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது.அவர்கள் மோரிகானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்