இந்நிலையில், ஷரபோவா, கடந்த 2016-ஜனவரி மாதம், ஆஸ்திரேலிய ஓபன் சென்னிஸின் போது தடை செய்யபட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது வெளிச்சத்திற்க்கு வந்தது. இதை தொடர்ந்து, சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, அவரை 2 ஆண்டுகள் டென்னிஸ் விளையாடுவதிலிருந்து தடை விதித்தது. இந்நிலையில், இப்படிபட்ட ஒரு குற்றப்பின்னணியில் இருக்கும் அவரின் வாழ்கையை படித்தால், மாணவர்களுக்கு அது ஒரு மோசமான உதாரணமாகிவிடும், அதனால் அவரின் பாடத்தை, புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும், கல்வித்துறையிடம் முறையிட்டனர். இதை அடுத்து, ஷரபோவாவின் பாடத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.