சுந்தரவன சதுப்பு நிலத்தில் மீன் பிடித்தவரை இழுத்துச் சென்ற புலி

சனி, 26 ஜூலை 2014 (15:21 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுந்தரவன சதுப்பு நிலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை புலி அடித்து இழுத்துச் சென்றது.
 
சுந்தரவன சதுப்பு நிலத்தில் நேற்று 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புலி ஒன்று பாய்ந்து சந்தோஷ் மோந்தல்(55) என்பவரை கடித்து இழுத்துச் சென்றது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நான்கு பேரும் புலி இழுத்துச்சென்ற பகுதியை நோக்கிச் சென்றனர். ஆனால் புலி சென்ற பகுதியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
 
பின்னர், கோசபா காவல் நிலையம் மற்றும் உள்ளூர் வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். சுந்தரவன சதுப்பு நிலத்தில் புலிகள் அடிக்கடி மீன்பிடிப்பவர்களை தாக்கும் சம்பவம் நடைபெற்றது வருகிறது. இப்பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்