பெங்களூரில் பயின்றுவரும் தோல்ஜிட், மைக்கல், ரோமென் எனும் மூன்று மாணவர்களும் 6 மாதங்களுக்கு முன்பிருந்து நாயை செல்லமாக வளர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அதை கொலை செய்து சமைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நாயை கொன்று கறி சமைத்ததை அறிந்ததும், தான் பெரும் அதிர்ச்சியடைந்ததாக புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார். இவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால் 2 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.