அரியான மாநிலம் தாத்ரி காவல் நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தார்மி, பைரி, சதிஸ் ஆகிய மூன்று குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த நான்கு மாதங்களாக அவர்கள் அந்த பெண்னை கற்ப்பழித்து வந்ததாக புகரில் கூறப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் அவள் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு காரில் வந்த அவர்கள் அவளை கடத்தி கற்பழித்து அதை மொபைல் போனில் படம்பிடித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் குற்றவாளிகள் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்த பாதிக்கப்பட்ட பெண்னை பயன்படுத்த முயற்சி செய்தனர் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளனர் இருந்தாலும் அந்த பெண் அவர்களின் கோரிக்கையை மறுத்துள்ளார். இதனால் அவர்கள் அந்த பெண்ணின் கற்பழிப்பு வீடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பி அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பினர் என அந்த பெண்ணின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.