ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உல்லாசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான். தகவல் அறிந்து, தீயணைப்பு படையினர் அங்கு சென்று 1 மணி நேரம் போராடி உல்லாஸ் உடலை இறந்த நிலையில் மீட்டனர். உல்லாசின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றி ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதை அடுத்து, தான் ஆசையாக வளர்த்த தலைமுடியை வெட்டும்படி கண்டித்ததால் மனமுடைந்து தற்கொலை செய்யப்போவதாக உல்லாஸ் எழுதியிருந்த கடிதம், அவன் புத்தக பையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.