வீட்டின் முன் பெண்ணின் நகையை பறித்த திருடன்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:50 IST)
லக்னோ பட்டப்பகலில் வீட்டின் முன் ஒரு பெண்ணில் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் காசியாபாத் மாவட்டம் கோகுல் தனம் என்ற பகுதியில் நேற்று  ஒரு பெண் வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியே வந்த நபர், அப்பெண்ணிடம் இருந்த நகையை கழட்டிக் கொடுக்கும்படி, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டினார்.

அப்பெண் என்னசெய்வதென்று தெரியாமல் அவரிடம் அந்த நகைகளைக் கொடுத்தார்.

இதுகுறித்த காட்சியில் சிசிடிவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்