மனஉளைச்சலில் ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட நபர் !

புதன், 23 நவம்பர் 2022 (22:53 IST)
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு  நபர் தன் ஆணுறுப்பை தானே வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நபர் ஷியாமல் முண்டா. இவர் சில  நாட்களாக வீட்டில் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,கடந்த புதன் கிழமை காலை வீட்டிலுள்ள கழிவறையில ரத்தம் வழிவதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், முண்டாவின் அண்னன்  நிர்மல் மற்றும் குடும்பட்தினர் இதுகுறித்து ஷியாமலிடம் கேட்டனர். அவரோ, தன் ஆணுறுப்பை வெட்டி காட்டி வீசிவிட்டதாகக் கூறியுள்ளார்.

அவர் 6 மாதங்களாக மன உளைச்சலில் இருந்ததை அறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு,  மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், கொல்கத்தவுக்கு ஷியாமலை கொண்டு செல்லும்படி மருத்துவர் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்