மேட்டூர் அணைப்பகுதியில் உள்ள கிருஸ்தவ கோபுரம் வெடி வைத்து தகர்ப்பா?

வியாழன், 16 ஏப்ரல் 2015 (20:50 IST)
மேட்டூர் அணை பகுதியில் உள்ள கிருஸ்தவ இரட்டை கோபுரம் ஒன்றில் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
 
மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியான பண்ணவாடியில் உள்ள இரட்டை கிறிஸ்தவ கோபுரம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பண்ணவாடி நீர்தேக்கப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்தை பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
 

 
அப்போது இரட்டை கோபுரத்தின் ஒரு கோபுரம் அதிர்ச்சியில் சரிந்து தண்ணீரில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாட்டு வெடிகுண்டு வீசி இந்த கோபுரம் தகர்க்கப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மீனவர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
வரலாற்று சிறப்பு மிக்க புராதான சின்னமாக கருதப்பட்ட இரட்டை கிறிஸ்தவ கோபுரத்தில் ஒன்று தகர்க்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளையும், அப்பகுதி மீனவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்