ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்: பஞ்சாப் முழுவதும் தீவிர சோதனை

வியாழன், 7 ஏப்ரல் 2016 (07:52 IST)
காஷ்மீரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி, பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள், இந்தியர் ஒருவருடன் சேர்ந்து  ஒரு காரில் வருவதாக டெல்லி காவல்துறையினர் பஞ்சாப் மாநில காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


 

 
அத்துடன், அந்த தீவிரவாதிகள் பஞ்சாப் எல்லையை நள்ளிரவில் அடையக்கூடும் என்றும் எச்சரித்தனர்.
 
அந்த தீவிரவாதிகள், டெல்லி, கோவா மற்றும் மும்பையை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் எனன்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கான ஆயுதங்களுடன் அவர்கள் வருவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது.
 
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்துமாறு அனைத்து காவல்நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்