தந்தை கண் முன்னே மகள் கடத்தல்! அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:26 IST)
தெலுங்கானாவில் தந்தையோடு சென்ற மகள் கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது இவரது 18 வயது மகள் ஷாலினியும் இன்று காலை அருகே உள்ள கோவில் ஒன்றிற்கு சென்று வந்துள்ளனர். அதிகாலை பூஜையில் பங்கேற்றுவிட்டு திரும்பி வரும்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சந்திரய்யாவை தாக்கிவிட்டு ஷாலினியை கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடத்தல் கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஷாலினிக்கு ஒரு காதலன் இருப்பதும், ஏற்கனவே அவருடன் ஓடி போக ஷாலினி சில முறை முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இப்போது ஷாலினியை கடத்தியது அவர் காதலன்தானா என்று தெரியாத நிலையில் விசாரணை தொடர்கிறது. இந்நிலையில் ஷாலினி கடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

#WATCH | Telangana: An 18-year-old girl was kidnapped in front of her father when they were returning to their house after visiting a temple, in the Sircilla district

(CCTV visuals) pic.twitter.com/GYedm9jkHJ

— ANI (@ANI) December 20, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்