கின்னஸ் சாதனை படைத்த தெலங்கானா பண்டிகை

ஞாயிறு, 9 அக்டோபர் 2016 (14:27 IST)
தெலங்கானா மாநிலத்தில் அரசு சார்பில் கொண்டாடப்பட்ட பதுக்கம்மா பண்டிகையில் ஒரே இடத்தில் அதிக பெண்கள் கூடியதால். இந்த விழா கின்னஸ் சாதனை படைத்துள்ளது.


 

 
நவராத்திரியின் எட்டாவது நாளில் கொண்டாடப்படும் பதுக்கம்மா பண்டிகையை அரசு விழாவாக தெலங்கானா அரசு அறிவித்தது. இந்த ஆண்டுக்கான பதுக்கம்மா பண்டிகைக்கான பிரமாண்டமாக ஹைதராபாத பால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் 9,292 பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கு முன்பாக கடந்த 2015ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓணம் நடனத் திருவிழாவில் 5,015 பெண்கள் கலந்துகொண்டிருந்ததே சாதனையாக இருந்தது.
 
இந்த விழாவில் தெலங்கானா உள்துறை அமைச்சர் நர்சிம்ம ரெட்டி, சுற்றுலாத் துறை அமைச்சர் சந்துலால் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்