இந்நிலையில், தனது ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க முதலமைச்சராக சந்திரசேகர ராவ் முடிவு செய்தார். இதனையடுத்து தெலுங்கானா முழுவதும் தனது சாதனைகளை விளக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக, மாநில அரசு சார்பில் ரூ.5 கோடி செலவில், சட்டீஸ்கரில் பென்ஸ் பேருந்து தயார் செய்யப்பட்டு, தெலுங்கானாவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த சொகுசு பேருந்தில் படுக்கையறை மற்றும் ஓய்வறை, 12 பேர் அமர்ந்து உரையாடும் வகையில் அறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன், பேருந்தில் இண்டர்நெட், வைபை வசதி உள்ளிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை இந்த சொகுசு பேருந்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.