தெலங்கானாவில் 101 விவசாயிகள் தற்கொலை

புதன், 30 ஜூலை 2014 (12:49 IST)
தெலங்கானாவில் கடந்த 2 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
 
இந்தியாவின் புதிய மாநிலமாக உருவான தெலங்கானா மாநிலத்தில் 2 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
 
பருவமழை பொய்த்ததால் வறட்சியில் சிக்கிய விவசாயிகள் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்த அவல நிலை குறித்து தெரிவித்த மாநில நீர்ப்பாசன அமைச்சர், சீமாந்திர தலைவர்கள் தெலங்கானா  விவசாயிகளுக்கு நீர் அளிப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்