கடந்த வெள்ளிக்கிழமை உத்தரபிரதேசம், பராச் மாவட்டம் நன்பரா கிராமத்தைச் சேர்ந்த காணாமல் போன சிறுமி ஒருவர் மறுநாள் காலை அந்த கிராமத்தின் எல்லையில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிண மாக கண்டெடுக்கப்பட்டார்.
காவல் துறை வசமுள்ள இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், தாங்கள் 3 பேரும் திட்டமிட்டு சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து கொன்றதாகவும் பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சிறுமியே தற்கொலை செய்துகொண்டார் என்பது போல் மரத்தில் கட்டி தொங்க விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.