கேரளாவில் சிறுவனை கொலை செய்து உடலுறவு கொண்ட 17 வயது இளைஞர் கைது

புதன், 26 ஆகஸ்ட் 2015 (13:09 IST)
11ம் வகுப்பு படித்துவரும் 17 வயது இளைஞர் ஒருவர் 9 வயது  சிறுவனை கொலை செய்ததாக கைது  செய்யப்பட்டுள்ளார்.  மேலும் அவர் இறந்த அந்த உடலுடன் உடலுறவு செய்ததாக கூறப்படுகிறாது. இந்த சம்பவம் கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் அருகிலுள்ள விழிஞ்சம் பகுதியில் நடைபெற்றுள்ளது. முன்னதாக ஆபாச படம்  பாத்துவிட்டு பின்னர்தான் இந்த கொடூர செயலில்  அவன் ஈடுபட்டதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.

17 வயது இளைஞன் தன்னுடைய செக்ஸ்  இச்சையை 9 வயது சிறுவன் மீது காட்டிய போது, அந்த சிறுவன் அதற்க்கு மறுத்துள்ளான், இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன் அருகில் இருந்த காலி மது பாட்டிலை கொண்டு சிறுவனின் தலையில்  தாக்கியுள்ளான். இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.குற்றம் சாட்டப்பட்ட அந்த  இளைஞன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.

பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் பாலியல்  வன்புணர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறான் என்றும்  இது அவன் உயிரிழந்த பின்புதான் நடந்திக்கிறது என நிரூபணமாகியுள்ளது என கூறியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர் இதற்க்கு முன்னால் இது  போன்ற செயல்களில் ஈடுபட்டுளாரா என விசாரித்து  வருவதாக இன்ஸ்பெக்டர் பி ஜினு தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்