ஆனால் இவ்வருடம் அவருக்கு விடுதில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து, பூஜா வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அவரால் அந்த செலவை சமாளிக்க முடியவில்லை. அதனால், பூஜா தற்கொலை செய்து கொண்டார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியதாவது, “சமூதாயத்தில் என்னை போன்று உள்ள பிற பெண்களுக்கு தேவையான கல்வி வசதிகளை பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும், என்னுடைய பயிற்சியாளரே என் தற்கொலைக்கு காரணம் அவரால்தான் எனக்கு விடுதியில் தங்கும் வசதி மறுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கல்லூரி நிர்வாகம் கூறியதாவது, “பூஜாவிற்கு இலவசமாக கல்வி பயில அனுமதி வழங்கப்பட்டது உண்மைதான், ஆனால் இந்தவருடம் கல்வியில் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனவே அவருக்கு, வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட்டது” என்றனர்.