தெலுங்கானாவில் கடந்த ஜூன் 1ம் தேதி சட்டமேலவை தேர்தல் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்.எல்.ஏவான ஸ்டீபன்சன் என்பவருக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் தருவதாக பேரம் பேசி அதில் ரூ.50 லட்சம் முன் பணமாக கொடுக்க முயன்றதாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ரேவந்த் ரெட்டி உள்பட 3 பேரை தெலுங்கானா மாநில ஊழல் தடுப்பு போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், திடீர் திருப்புமாக ,அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சந்திரவெங்கட வீரையாவை, ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.