உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாஸை ஆதரித்து வாக்கு சேகரித்த அரவிந்த் கெஜ்ரிவால், யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி கூறினார்.
இந்நிலையில், அமேதியின் ரனிகஞ்ச் பகுதியில் உள்ள ஷுக்லா பசாரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கெஜ்ரிவால், 'தேர்தல் நேரத்தில் நிறைய பேர் உங்களுக்கு பணம், புடவைகள் மற்றும் பிற பொருட்களை தருவார்கள்.
நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் நான் பாஜகவினரால் தாக்கப்படுகிறேன். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் குமார் விஷ்வாஸ் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சியினர் மோடியை தாக்கியதாகவும், பாஜகவினர் சோனியாவின் குடும்பத்தை தாக்கியதாகவும் நாம் கேள்விபடுவதில்லை.ஏனென்றால் இவர்களுக்குள் ஒரு ரகசிய உடன்பாடு உள்ளது.