ஈராக்கிலும், சிரியாவிலும் ஐஎஸ் என்ற தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக, அந்த இயக்கத்தின் நடவடிக்கை உலகின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றன. இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத நடவடிக்கை சமீப நாட்களில் பெருகி வருகிறது. மேலும், சமூக வலைதளங்களிலும், டுவிட்டரிலும் அந்த இயக்கத்துக்கு ஆதரவாக சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் பிரசாரம் செய்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹதி மசூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். இவருக்கும் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாக இவருடைய பெயர் நிக்கோல் ஜோசப் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.