இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் போலிசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் யார் குண்டு வைத்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் அந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வெடிகுண்டு வெடித்த பகுதியில் நடந்த சம்பவங்களை, சிசிடிவி கேமரா மூலம் அவர்கள் ஆராய்ந்ததில், ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர் எம்.ஜி.ரோடு பகுதியில் தலையில் தொப்பி, கையில் பை, நீல நிற சட்டை அணிந்துள்ளார். அவர்தான் குண்டு வைத்தவர் என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள். அவர் நடந்து செல்லும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அவரின் முகம் சரியாக தெரியவில்லை. அந்த வீடியோவை வெளியிட்ட போலிசார், அவரை பற்றிய தகவல் தெரிந்தால், காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் என்று கூறியுள்ளனர்.