இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் ஜெய்சங்கரை வெளியுறவு செயலராக நியமனம் செய்யும் முடிவில் தம்முடைய பங்கும் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் ஜெய்சங்கரை வெளியுறவு செயலராக நியமனம் செய்ய அரசு விரும்புவதாக சுஜாதா சிங்கிடம் தாம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவிற்கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர் நேற்று வெளியுறவு செயலராக பதவியேற்றுக் கொண்டார். வரும் 31 ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெற உள்ள ஜெய்சங்கர், திடீரென வெளியுறவு செயலராக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.