ஜார்கண்ட்டைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ’வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் தகவல்களை என்கிரிப்ட் செய்வதால் தீவிரவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் உதவும் வகையில் உள்ளது.
எனவே, வாட்ஸ் அப், வைபர், டெலிகிராம், ஹைக் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால், இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.