நீட் தேர்வு ஒத்திவைப்பா? சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:19 IST)
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அதிரடி உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது
 
நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என ஏராளமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சற்றுமுன் தள்ளுபடி செய்துள்ளனர்
 
நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீர் தேர்வு நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
நீட் தேர்வை தள்ளுபடி செய்ய கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்