ஓரினச் சேர்க்கை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 337-இல் உள்ள ஓரினச் சேர்க்கை தண்டனைக்குறியது என்பதை மாற்றி அமைப்பது தொடர்பான இந்த விசாரணை இன்று நடைபெற உள்ளது.
வயதுக்கு வந்த இருவர் தங்கள் விருப்பத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் அது குற்றமாகது என்ற டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.