கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கருப்பு பணம் வெள்ளையாக மாற்றப்படுவதாகவும், போலி கணக்குகளில் அதிகளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஹவாலா பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் வந்த புகார்களின் பெயரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.
கேரளாவில் உள்ள கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி ரெய்டை சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் நடத்தினர்.