மீனவர்கள் விடுதலைக்கு ராஜபக்சே, மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது - சுப்பிரமணியன் சாமி

வியாழன், 20 நவம்பர் 2014 (19:29 IST)
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, உண்ர்ச்சி பூர்மான பிரச்சனையில் கூட்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்ட இந்தியா மற்றும் இலங்கையின் தலைவர்களுக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்களின் உணர்ச்சி  பூர்வமான தமிழக மீன்வர்கள் பிரச்சனைக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே, மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் கூட்டு முயற்சியால் விளைந்த தீர்வுக்கு நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது. இந்த மீனவர்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு உதவும் 2010 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை நான் இருவரின் கவனத்திற்கு கொண்டு சென்றது பற்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்றார். மேலும், இருநாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் உரையாடல் மூலம் முறிவு கண்ட இந்தியா இலங்கை உறவுகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்