என்னுடைய அடுத்த இலக்கு அவர்தான் - பீதி கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

திங்கள், 20 பிப்ரவரி 2017 (10:43 IST)
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, அரசியல் தலைவர்களின் மீது ஊழல் வழக்கு தொடர்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்.


 

 
ஜெயலலிதா, சசிகலா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு கூட இவர் தொடர்ந்ததுதான். இந்நிலையில், நேற்று மாலை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளர். அதில் “ நாளை நான் ஒரு அரசியல்வாதியின் ஊழல் பற்றி தெரிவிக்க இருக்கிறேன். அவரின் வழக்கு விசாரணைக்கு பின்னர் மற்றொருவரை கையில் எடுக்க உள்ளேன். ஒரே நேரத்தில் இது நடக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


 

 
அவர் குறிப்பிட்டுள்ள அரசியல்வாதி யார் எனத் தெரியவில்லை. எனவே இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.   அது பற்றிய தகவலை இன்று அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்