சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்கிறாரா சுப்பிரமணிய சாமி?

திங்கள், 25 மே 2015 (22:50 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு கர்நாடக அரசின் முடிவுக்காக காத்திருக்கப்போவதாக  சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி, கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
 
மேலும், தான் கர்நாடக அரசின் முடிவுக்காக வருகிற ஜூன் 1ஆம் தேதி வரை காத்திருக்கப்போவதாகவும், அதன்பிறகு மேல்முறையீடு செய்வது குறித்து, தான் முடிவு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்