மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த மாநில தேர்தல் இரண்டு கட்டமாக நடைப்பெற உள்ளது. முதற் கட்டம் மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் மார்ச் 8ஆம் தேதி நடைப்பெறுகிறது.
இந்நிலையில் கே.எஸ். என்ற மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், இம்பாலில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சம்பவத்திற்கு முன்னதாக மாணவர்கள் அமைப்பினர் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என அனுமது கோரி அலுவலகம் வாசலில் காத்திருந்தனர்.