மகளுடன் தொடர்பு வைத்திருந்த 7-ஆம் வகுப்பு மாணவனை கொன்ற ஆசிரியர்

வியாழன், 11 பிப்ரவரி 2016 (14:58 IST)
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த 7-ஆம் வகுப்பு மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய காவல் துறை குற்றவாளியை கைது செய்தது. முதலில் மாணவன் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்த காவல் துறை. ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியது.
 
பின்னர் தான் தெரியவந்தது, அந்த மாணவன் ஆசிரியர் ஒருவரின் மகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும், அதனால் கொலை செய்யப்பட்டான் என்றும்.
 
சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரித்த போது, ஆசிரியையின் 11 வயது பெண்ணுடன், 7ம் வகுப்பு மாணவர் நெருங்கிய நட்பு வைத்திருந்தாராம். இதனைப் பிடிக்காத ஆசிரியையின் 11ம் வகுப்பு படிக்கும் மகன், தனது வீட்டுக்கு வந்த அந்த மாணவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
 
அப்போது இருவருக்கும் நடந்த மோதலின் போது, அந்த மாணவரை மாணவனும், அவரது அம்மாவான ஆசிரியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்