இது குறித்து செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், "இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.
இலங்கை தமிழர் பிரச்சனை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை அதிபரின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் வந்து, பிரதமரையும், வெளியுறவுத்துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்துவிட்டு, பல தீர்வுகளை கொடுக்க இருக்கிறார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரிகிறது.