சுஷ்மாவை நலம் விசாரித்த சோனியா, ராகுல்

திங்கள், 20 ஏப்ரல் 2015 (19:38 IST)
அரசியல் வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவாரஜிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நலம் விசாரித்தனர்.
 
சோனியா காந்தி மீதான விமர்சனத்துக்காக அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஏற்படுத்திய அமளி காரணமாக அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது அந்த இடைவேளையில், சுஷ்மாவை சந்தித்து சோனியாவும், ராகுலும் நலம் விசாரித்தனர்.
 
இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரிய சூலே ஆகியோரும் நலம் விசாரித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்