பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது, ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதியை ஒட்டிய பகுதி என்பது கவனிக்கத்தக்கது.
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், உயிரிழந்த 6 பேரில் பொதுமக்களில் 3 பேரும், ஒரு எஸ்.பி. உட்பட காவல் துறையைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஞ்சாப், டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.