மேலும் கப்பலில் குளோரோஃபார்மேட், டைமெத்தில் சல்பேட் போன்ற ரசாயன மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால், அந்தக் கப்பல் வெடித்து சிதறினால் கேரள கடற்கரை பகுதியில் மீன்பிடித்தலும், சுற்றுச்சூழலும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, கேரளா மக்கள் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.