500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்த பிரதமர் மோடி ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பின்னர், 2 ஆயிரம் ரூபாய் பதுக்கலுக்கு வசதியாக இருக்கும், எதிர்காலத்திலும் கருப்பு பண பிரச்சனை தொடரும் என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், டிசம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகும் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றார்.