சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தண்டன், அமீர்கானை அறைபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர்கான், லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் தங்கியுள்ளார். அந்த ஹோட்டலில் வெளியே அவருக்கு எதிராக சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவரது புகைப்படங்களை எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன் தலைமை தாங்கினார்.
ராஜின் தண்டன் பேசும் போது “அமீர்கான் தங்கியிருக்கும் இந்த ஹோட்டலில் உழியர்களுக்கும், அவர் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு தருகிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்கள் அமீர்கானின் கன்னத்தில் அறையும் ஒவ்வொரு அறைக்கும் ஒரு லட்சம் பரிசு தரப்படும்” என்று கூறினார். அவர் அப்படி கூறியிருப்பது பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.