இதுகுறித்து அக்கட்சியின் நாளிதழான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் "ராமர் கோயில் தொடர்பாக பலர் ரத்தம் சிந்திய நிலையிலும் அங்கு ஒரு கோயிலை கட்ட இயலாமல் போனால், இதற்காக உயிரை தியாகம் செய்த நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவான அரசு என்ற எண்ணத்தை மாற்ற ராமர் கோயிலை மத்திய அரசு கட்ட வேண்டியது அவசியமாகும். இப்போது இல்லை என்றால் எப்போதுமே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டமுடியாது” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.