இந்திராணி, அவரின் முன்னாள் கணவர் சஞ்ஜீவ் கன்னா மற்றும் அவரின் ஓட்டுனரால் ஷீனா 2012 ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையிலிருந்து 84கிமீ தூரமுள்ள ராய்காட் என்ற இடத்தில் எரித்துக் கொல்லப்பட்டார். உலகிற்கு தனது தங்கை என அறிமுகம் செய்து வைத்த ஷீனாவை தான் வெறுத்தேன். ஆனால் நான் அவரை கொலை செய்யவில்லை என விசாரணையில் இந்திராணி தெரிவித்துள்ளார்.
43 வயதான இந்திராணி தனது மகள் மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்றுவிட்டார் என தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்க காவல் துறையினர் கொலை நடந்த காலத்தில் அமெரிக்க சென்ற பயணிகளின் பட்டியலை திரட்டி வருகின்றனர். மேலும் இந்திராணியின் மடிக்கணினி கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட மூன்றுபேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.